மைக்கேல் ஜாக்சனின் மரண படுக்கை விற்பனைக்கு வருகிறதுமைக்கேல் ஜாக்சனின் மரண படுக்கை விற்பனைக்கு வருகிறது ... "புதிய தலைமுறை டிவி' பார்வையாளர் பட்டியலில் முதலிடம் "புதிய தலைமுறை டிவி' பார்வையாளர் பட்டியலில் முதலிடம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏப்ரல் - அக்டோபர் மாத காலத்தில் ரப்பர் உற்பத்தி 4.81 லட்சம் டன்னாக உயர்வு - பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
00:53

நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, தற்காலிக புள்ளி விவரத்தின் படி, 4 லட்சத்து 80 ஆயிரத்து 700 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 5 சதவீதம் (4 லட்சத்து 57 ஆயிரத்து 650 டன்) அதிகமாகும் என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ள அதே நேரத்தில், இதன் பயன்பாடு, இதே காலத்தில், 5 லட்சத்து 50 ஆயிரத்து 230 டன்னிலிருந்து, 5 லட்சத்து 51 ஆயிரத்து 425 டன் என்றளவில் குறைவாகவே உயர்ந்துள்ளது.சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், இதன் உற்பத்தி, 89 ஆயிரத்து 300 டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 8.4 சதவீதம் (82 ஆயிரத்து 400 டன்) அதிகமாகும். இதே மாதங்களில், இதன் பயன்பாடு, 2.7 சதவீதம் உயர்ந்து, 76 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.
நடப்பாண்டு அக்டோபர், 31ம் தேதி வரையிலுமாக, இயற்கை ரப்பர் கையிருப்பு, 2 லட்சத்து 47 ஆயிரம் டன்னாக இருந்தது. அதே சமயம், கடந்தாண்டின் இதே காலத்தில், இதன் கையிருப்பு, 2 லட்சத்து 53 ஆயிரத்து 877 டன்னாக இருந்தது. ஆக, கையிருப்பில் இருந்த ரப்பர் அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 6,877 டன் குறைந்துள்ளது.
ஏற்றுமதி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 412 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,738 டன்னிலிருந்து, 19 ஆயிரத்து 995 டன்னாக அதிகரித்துள்ளது. ஆனால், இதன் இறக்குமதி இதே காலத்தில், 30 சதவீதம் சரிவடைந்து, 1 லட்சத்து 38 ஆயிரத்து 245 டன்னிலிருந்து, 95 ஆயிரத்து 919 டன்னாக சரிவடைந்துள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)