பதிவு செய்த நாள்
11 நவ2011
00:59
சென்னை:கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி தொடங்கப்பட்ட, "புதிய தலைமுறை' டிவி, 60 நாட்களுக்குள், அதிகமா னோர் பார்க்கும் செய்தி தொலைக்காட்சிகளின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.ஏ.சி.நீல்சன் நிறுவனம், தமிழகத் தில் கேபிள் மற்றும் செயற்கைக்கோள் வாயிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்போர் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பாண்டில், சென்ற, 44வது வாரத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர் களிடம் ஆய்வு நடத்தியது. அதில், மொத்த தர புள்ளிகள் அடிப்படையில், "புதிய தலைமுறை டிவி', 35.94 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது என, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், நிறுவனத்தின் இயக்குனர் (செய்திப் பிரிவு) எஸ்.சீனிவாசன், "தமிழகத்தில் பல தொலைக்காட்சிகள் செய்திகளை வழங்கி வருகின்றன. எனினும், அவற்றின் கொள்கைகள் காரணமாக, சுதந்திரமாக, உடனுக்குடன் செய்திகளை வழங்க முடியாமல், ஒரு வட்டத்திற்குள்ளேயே உள்ளன. இது, தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே ஒரு சலிப்புத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. மாற்று சேனல்களை அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர். அந்த இடத்தை புதிய தலை முறை நிரப்பியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|