பதிவு செய்த நாள்
11 நவ2011
01:00
சென்னை:கேரள அரசு , சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில்,"கிராண்ட் கேரளா ஷாப்பிங் பெஸ்டிவல்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.இதுகுறித்து, கேரளா சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குனர் ரத்தன் கேல்கர் கூறியதாவது:சென்ற ஆண்டில், 86 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், ஆறு லட்சம் வெளிநாட்டினரும், கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும்,"கிராண்ட் கேரளா ஷாப்பிங்பெஸ்டிவல்'வரும், டிசம் பர் 1ம் தேதி தொடங்கி,ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.இத்திட்டத்தின் கீழ்,கேரளாவில் உள்ள கடைகளில், தங்கம்,ஜவுளி,மின் சாதனம் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கூப்பன்கள் வினியோகிக் கப்படும். இதற்காக, 7,000 கடைக்காரர்கள் பதிவு செய்துள்ளனர்.
கூப்பன் ஒன்றில், 100 ரூபாய் முதல், 1 கிராம் தங்கம் வரை பரிசு வழங்கப்படுகிறது. கூப்பனை சுரண்டினால் அதில் பரிசுப் பொருட்கள் குறித்த விவரம் தெரியும். அதன் அடிப்படையில், உரிய பரிசு வழங்கப்படும்.வெளி மாநிலங்களி லிருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாங்கும் பொருட்களுக்கு, மதிப்பு கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இதனால், அவர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். இவ்வாறு, கேல்கர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|