பதிவு செய்த நாள்
11 நவ2011
09:38
புதுடில்லி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கிதவி்ப்பதால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் தனது விமான சேவையை ரத்து செய்துள்ளது. தனியார் நிறுவனத்தை சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு தினந்தோறும் 50 க்கும் அதிகமான விமான சேவையை வழங்கி வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தனது விமான சேவையை குறைத்து வந்தது. இதனால் மொத்தம் 120 விமான சேவைகள் ரத்தானது. இந்நிலையில் விமான சேவையை கட்டுப்படுத்தி வரும் டைரக்டரேட் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் அமைப்பு விமான சேவையை ரத்து செய்ததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும் கிங்பிஷர் நிறுவனம் ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு சுமார் 600 கோடி ரூபாயும், பாரத்பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சுமார் 250 கோடி ரூபாயும் நிலுவை வைத்துள்ளது. இதனால் அந்தந்த எண்ணெய் நிறுவனங்கள் விமானத்திற்கு தேவையான எரிபொருளை அனுப்பவில்லை என்றும். தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு வங்கி கடனை சரிவர திருப்பி செலுத்த முடியாத காரணத்தாலும் விமானங்கள் இயக்கப்பட வில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|