பதிவு செய்த நாள்
12 நவ2011
00:01
புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி,கடந்த இரண்டு ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு, 1.9 சதவீதமாக மிகவும் சரிவடைந்துள்ளது. இது, பல்வேறு அமைப்புகளின் மதிப்பீட்டை விட, மிகவும் குறைவாகும். நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில்,தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி,4.1 சதவீதம் என்ற அளவிலும், கடந் தாண்டு செப்டம்பரில், 6.1 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்து காணப்பட்டது என, மத்திய புள்ளியியல் அமைச் சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறியீட்டு எண்: 2004-05ம் நிதியாண்டை, அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது. இவ்வகையில், சென்ற செப்டம்பர் மாதத்தில், மின் உற்பத்தித் துறை தவிர, ஏனைய அனைத்து துறைகளின் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துள்ளது.ரிசர்வ் வங்கி சென்ற 2010ம் ஆண்டு மார்ச் முதல் இது வரை யிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 13 முறை உயர்த்தியுள்ளது.
இதனால், பணவீக்கம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது என்றாலும்,அது,நாட்டின் தொழில் உற்பத்தியில் அதிக இடர் பாட்டை ஏற்படுத்தியுள்ளது என பல தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.ஏனெனில்,அதிக வட்டி விகிதத் தால்,நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெறுவதற்கு, அதிக வட்டி செலுத்த வேண்டியுள்ளது.இதனால்,தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பின்னடை வை சந்தித்து வருகிறது.
அரையாண்டு: நடப்பு 2011 - 12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது,கடந்த 2010-11ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில்,8.2 சதவீதம்என்றளவில் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.1 சதவீதமாக இருந்தது என, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது மறுமதிப்பீட்டில், 3.59 சதவீதமாக குறைந்துள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில்,தயாரிப்பு துறையின் உற் பத்தி வளர்ச்சி, 2.1 சதவீதமாக, மிகவும் குறைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 6.9 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது.
தொழில் துறைஉற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில்,தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதம் என்றளவில் உள் ளது.நாட்டின் சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி,கடந்த ஆண்டு செப்டம்பரில்,4.3சதவீதம் என்ற அளவில் இருந் தது.ஆனால், நடப்பாண்டு செப்டம்பரில், இத்துறை 5.6 சதவீத எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. பொறியியல் துறை யின் உற்பத்தி வளர்ச்சி,கடந்தாண்டு செப்டம்பரில், 7.2சதவீதம் என்றளவில் இருந்தது.ஆனால்,நடப்பாண்டு செப்டம் பரில், இத்துறை,6.8 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இடைநிலை பொருட்கள்:உள்நாட்டில்,இதேமாதங்களில்,இடைநிலை பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.6சதவீதம் என்றளவில் இருந்து,1.5 சதவீதமாக மிகவும் குறைந்து போயுள்ளது.நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டு செப்டம்பரில்,5.8 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பாண்டு செப்டம்பரில், இத்துறை 1.3 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.பல்வேறு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்து போயுள்ள நிலையில், மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, நடப்பாண்டு செப்டம்பரில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு செப்டம்பரில், 1.8 சதவீதம் என்றளவில் மிகவும் குறைந்திருந்தது.
திட்ட கமிஷன்:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சரிவடைந்துள்ளது என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில்,மந்த நிலையை உருவாக்கும். இருப்பினும்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி,கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாக,திட்ட கமிஷனின் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
இதுகுறித்து, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறுகையில்,"தொழில்துறை உற் பத்தி வளர்ச்சி சரிவடைந்துள்ளது வருத்தம் அளிப்பதாக உள்ளது.வட்டி உயர்வு மட்டுமே,தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைவிற்கு காரணம் இல்லை' என்று தெரிவித்தார்.
அமெரிக்கா: இந்தியாவில் மட்டுமின்றி, வளர்ச்சியடைந்த நாடுகளான, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி பின் தங்கியுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, நம் நாட்டின் ஏற்றுமதி, சென்ற அக்டோபர் மாதத்தில், 10.8 சதவீதமே வளர்ச்சிக் கண்டு,1,990 கோடி டால ராக இருந்தது. அதேசமயம், சென்ற செப்டம்பரில், நாட்டின் ஏற்றுமதி, 36 சதவீதம் என்றளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது.சென்ற அக்டோபரில் நாட்டின், கார் விற்பனை, 24 சதவீதம் சரிவடைந்திருந்தது. இது, கடந்த 10 ஆண் டுகளில் இல்லாத சரிவு நிலையாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|