பதிவு செய்த நாள்
12 நவ2011
00:05
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. இதுநாள் வரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், சர்வதேச அளவில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லை என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில்,உள்நாட்டிலும்,தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு,ஏற்றுமதி குறைந்து போயு ள்ளது மற்றும் கார் விற்பனை சரிவடைந்துள்ளது போன்றவற்றை வைத்து பார்க்கையில்,இந்தியாவின் பொருளாதாரத் திலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சென்றசெப்டம்பர் மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால்,பலருடைய மதிப்பீடுகளையும் பொய்ப்பித்து, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி1.9 சதவீதமாக மிகவும் சரி வடைந்துள்ளது.இதையடுத்து,வங்கி,உலோகம்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம்,மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.
பங்குசந்தையில் ஏற்பட்ட சரிவு நிலையால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,169.28 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,192.82 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,அதிக பட்சமாக, 17,279.23 புள்ளிகள் வரையிலும்,குறைந்தபட்சமாக, 17,096.84 புள்ளிகள் வரையிலும் சென்றது. சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 11 நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்"நிப்டி'52.20 புள்ளிகள் குறைந்து,5,168.85 புள்ளிகள் நிலைபெற்றது.வர்த் தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 5,198.60 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,142.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|