குறைகிறது பெட்ரோல் விலை?குறைகிறது பெட்ரோல் விலை? ... தங்கம் விலை அதிரடி உயர்வு : ஒரு சவரன் ரூ. 21,904 தங்கம் விலை அதிரடி உயர்வு : ஒரு சவரன் ரூ. 21,904 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தேசிய வங்கிகளில் வருமான வரி செலுத்தும் வசதி: நெரிசலை தவிர்க்க ரிசர்வ் வங்கி முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2011
11:52

சென்னை: "டிசம்பர் மாத கடைசியில் ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வருமான வரியை பணமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி, மண்டல இயக்குனர் என்.எஸ்.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: டிசம்பர் மாத கடைசியில், ரிசர்வ் வங்கியில் வருமான வரியைச் செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரிய வருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப்பணத்தை பெறுவதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது, வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி அதிக நேரம், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் உள்ள சங்கடங்களைத் தவிர்க்கும் பொருட்டு, நகரத்தில் உள்ள வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு முன், வரியைச் செலுத்த வேண்டுகிறோம். இந்திய ரிசர்வ் வங்கி தவிர, தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட பின் வரும், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கும், வரியைப் பணமாகவோ, காசோலையாகவோ பெற அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர் வசதிக்காக செய்யப்பட்டுள்ள, இந்த ஏற்பாட்டை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் என்.எஸ்.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த வங்கிகளில் வரி செலுத்தலாம்: பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கிகளில் வருமான வரி செலுத்தலாம். மேலும், தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., ஐ.டி.பி.ஐ., மற்றும் எச்.டி.எப்.சி., வங்கிகளிலும் மக்கள் வருமான வரி செலுத்தலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)