பதிவு செய்த நாள்
12 நவ2011
15:43
மும்பை : கிரெடிட் கார்டு மூலம் நடைபெற்ற பண பரிவர்த்தனை செப்டம்பர் மாதத்தில் 31.5 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூ.7,693.81 கோடி மதிப்பிலான பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதேசமயம் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபர பணக்கின்படி செப்டம்பர் மாதத்தில் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 4.3 சதவீதம் குறைந்து 1.76 கோடியாக உள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு முடிவில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை 30 சதவீதம் அதிகரித்து ரூ.45,372.06 கோடியாக உள்ளது. செப்டம்பர் மாதத்தில் டெபிட் கார்டு பரிவர்த்தனை 37.3 சதவீதம் அதிகரித்து ரூ.4,101.32 கோடியாக உள்ளது. இந்த மாதத்தில் 25.19 கோடி டெபிட் கார்டுகள் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை டெபிட் கார்டு மூலமான பண பரிவர்த்தனை 42.3 சதவீதம் அதிகரித்து ரூ.24,585.19 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|