பதிவு செய்த நாள்
13 நவ2011
03:07
சென்னை : இன்னோ குழுமம், சென்னையை அடுத்த ஒரகடத்தில், இரண்டாம் கட்ட குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், குடியிருப்பு வளாகத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, உலகப் புகழ் பெற்ற, தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இது குறித்து, இன்னோ ஜியோசிட்டி நிறுவன இயக்குனர் கல்யாண் ஜெயபிரகாஷ் கூறியதாவது: ஒரகடத்தில், ஐரோப்பியப் பாணியில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட, இன்னோ ஜியோசிட்டி குடியிருப்புகள், அடுத்த ஆண்டு மே மாதம், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். இங்கு, இரண்டாம் கட்ட குடியிருப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 980 -1,158 சதுர அடி கொண்ட 200 பங்களா அபார்ட்மென்ட்கள் கட்டப்பட உள்ளன. இவை, தனிப்பட்ட வீடுகளில், எத்தகைய வசதிகள் உள்ளதோ, அத்தகைய வசதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்த குடியிருப்புகளின் விலை, 30 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
இதுவரை, 100 குடியிருப்புகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்புற மாசின்றி, பசுமையான இயற்கைச் ‹ழலில், அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த குடியிருப்புகள், 18-24 மாதங்களுக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். இன்னோ ஜியோசிட்டி வளாகத்தில், உலகத் தரம் வாய்ந்த, தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் அமைய உள்ளது. இவ்வாறு, கல்யாண் ஜெயபிரகாஷ் கூறினார்.
தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (டிப்ஸ்) தலைவர் அசோக்குமார் பேசும்போது, இன்னோ ஜியோசிட்டியில், வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தைக் கொண்ட பள்ளிக்கூடம் செயல்படத் தொடங்கும்.
சுவிட்சர்லாந்தின் இண்டர்நேஷனல் பேக்குலரேட் கல்வி மையத்தின் கூட்டுடன் செயல்படும் இப்பள்ளி, தனித்தன்மை வாய்ந்தது. இங்கு, முற்றிலும் புதிய கோணத்தில், அறிவு சார் கல்வி போதிக்கப்படும் என்பதுடன், கல்வியுடன் விளையாட்டு, பொழுதுபோக்கு என, அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும். கல்விக் கட்டணம், 25 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது, நிறுவனம் அமைக்கும் ஏழாவது பள்ளிக்கூடம் என்று தெரிவித்தார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|