பதிவு செய்த நாள்
13 நவ2011
03:08
சென்னை : மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், ஈடுபட்டு வரும், ஜி.கே.என். டிரைவ்லைன் நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, ஜி.கே.என்.டிரைவ்லைன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (ஆசியா- பசிபிக்) மார்க் வார்செக்ஸ் கூறியதாவது: தமிழகம் மற்றும் இதர தென் மாநிலங்களில், தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். நிறுவனத்தின் வர்த்தகம் ஆண்டுக்கு, 15 சதவீதம் என்றளவில் வளர்ச்சிக் கண்டு வருகிறது. புதிய தொழிற்சாலை, 48 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரகடத்தில், தொடங்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் உள்ள மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு தேவைக்கு ஏற்ப, ஆண்டுக்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் சைட் ஷாப்டர்கள் தயாரிக்கப்படும். தற்போது, நிறுவனத்தில், 60 பேர் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை, அடுத்தாண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|