பதிவு செய்த நாள்
13 நவ2011
03:09
மும்பை : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, நவம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 572 கோடி டாலர் (28 ஆயிரத்து 600 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 466 கோடி டாலராக (15 லட்சத்து 73 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2010ம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியிலிருந்து, தற்போது வரை, அன்னியச் செலாவணி கையிருப்பு,1,733 கோடி டாலர் (86 ஆயிரத்து 650 கோடி ரூபாய்) அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 28ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 85.80 கோடி டாலர் (4,290 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது. அன்னியச் செலாவணி சொத்து மதிப்பில், 387 கோடி டாலர் (19 ஆயிரத்து 350 கோடி ரூபாய்) அளவிற்கு ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 177 கோடி டாலர் (8,850 கோடி ரூபாய்) குறைந்தது போன்றவற்றால், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து போயுள்ளது.
அன்னியச் செலாவணி குறைந்ததற்கு, ரிசர்வ் வங்கி தரப்பில் சரியான காரணம் கூறப்படவில்லை. எனினும்,அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென், ஸ்டெர்லிங் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|