நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.28,600 கோடி சரிவுநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.28,600 கோடி சரிவு ... ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 10 சதவீதம் உயர்வு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 10 ... ...
நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை 13 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2011
03:10

நடப்பு 2011ம் ஆண்டின், மூன்றாவது காலாண்டில், இந்தியாவில், கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றின் விற்பனை 31 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையுடன் ஒப்பிடுகையில், 13 சதவீதம் அதிகமாகும்.
இந்திய கம்ப்யூட்டர் வரலாற்றில், தற்போது தான் இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. நுகர்வோரிடையே கம்ப்யூட்டர்களுக்கான தேவை மிகச் சிறந்த அளவில் அதிகரித்து வருவதை இது எடுத்துக் காட்டுகிறது என, ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டர்கள் விற்பனையில், லேப்-டாப்பின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. இவ்வகை கம்ப்யூட்டர்களின் விற்பனை, 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மேலும்,மொத்த விற்பனையில், வீட்டு உபயோகத்திற்கான கம்ப்யூட்டர்கள் விற்பனையின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி இதன் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், நான்காவது காலாண்டில் இதன் விற்பனை சற்று குறைய வாய்ப்புள்ளது என, கார்ட்னர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் விஷால் திரிபாதி தெரிவித்தார்.
பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் விற்பனை, இரட்டை இலக்க அளவிற்கு வளச்சி கண்டுள்ளது. மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில், 15 சதவீத பங்களிப்புடன் டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
கம்ப்யூட்டர்கள் விற்பனையில், கடந்த இரண்டு காலாண்டுகளாக, எச்.பி. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு குறைந்து போயுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம், 13.3 சதவீத விற்பனை பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இது, இதற்கு முந்தைய இரண்டாவது காலாண்டில், 11.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது. மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள, லெனோவா நிறுவனத்தின் விற்பனை,10.4 சதவீதத்திலிருந்து, 12.1 சதவீதமாக அதிகரித்துள்ளது .
நாட்டின் மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனை சந்தையில், டெல், எச்.பி., ஏசர் மற்றும் லெனோவா ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்களிப்பு 51.10 சதவீதமாக உள்ளது. மேற்கண்ட பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை வளர்ச்சி கண்டுள்ள நிலையில், மூன்றாவது காலாண்டில், எச்.சி.எல். நிறுவனத்தின் விற்பனை மட்டும் 5.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய இரண்டாவது காலாண்டில், 6.6 சதவீதமாக இருந்தது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)