பதிவு செய்த நாள்
13 நவ2011
03:11
புதுடில்லி : நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான முதல் ஏழு மாத காலத்தில், இந்திய ரயில்வே, 57 ஆயிரத்து 338 கோடி ரூபாயை வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 10.13 சதவீதம் (52 ஆயிரத்து 66 கோடி ரூபாய்) அதிகமாகும்.
இதே காலத்தில், சரக்குகள் கையாண்டதன் மூலம் கிடைத்த வருவாய், 9.98 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34 ஆயிரத்து 629 கோடி ரூபாயிலிருந்து, 38 ஆயிரத்து 86 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பயணிகள் மூலம் கிடைத்த கட்டண வருவாய், 9.73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14 ஆயிரத்து 847 கோடி ரூபாயிலிருந்து, 16 ஆயிரத்து 321 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதர இனங்களின் மூலம் கிடைத்த வருவாய், 12.50 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,439 கோடி ரூபாயிலிருந்து, 1,619 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலங்களில், ரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை, 481.77 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 5.32 சதவீதம் (457 கோடி பேர்) அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|