ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 10 சதவீதம் உயர்வுஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 10 ... ... அத்யாவசிய மருந்துகள் விலை குறைவு அத்யாவசிய மருந்துகள் விலை குறைவு ...
தென்னை மரம் ஏறுபவர்களுக்காக கேரளாவில் ஆன்-லைன் டைரக்டரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2011
09:54

திருவனந்தபுரம்:கேரளாவில், தென்னை விவசாயிகளின் வசதிக்காக, ஆன்-லைன் டைரக்டரியை, தேங்காய் வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கேரள மாநிலத்தில் தான், நாட்டிலேயே அதிகளவில், தென்னை வளர்ப்பு நடக்கிறது. இங்கு, 15 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில் ஏறி தேங்காய் பறித்துப் போட, 30 ஆயிரம் பேர் தேவை. ஆனால், அதில் பாதிப்பேர் கூட அங்கு இல்லை.இங்கு, தென்னை மரமேறி, தேங்காய் பறித்துப் போட ஆட்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாக உள்ளது. இந்நிலையை மாற்றிட, தேங்காய் வளர்ச்சிக் கழகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இக்கழகம் சார்பில், மாநிலத்தில் வேலையற்ற, நல்ல உடல் திறன் மிக்க இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தென்னை மரங்களில் ஏற பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, வாரந்தோறும் 20 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது, மாநிலத்தில் 1,593 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது மரங்களில் தேங்காய் பறித்துப் போட ஆட்கள் கிடைக்காமல் அவதியுறும் நிலையை மாற்ற, தற்போது, மரமேறுபவர்கள் குறித்தான ஆன்-லைன் டைரக்டரியையும் தேங்காய் வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதிக்கு, "பிரண்ட்ஸ் ஆப் கோகனட் ட்ரீ' என பெயரிடப்பட்டு, மாவட்டம் வாரியாக எங்கெங்கு தென்னை மரம் ஏறுபவர்கள் உள்ளனர், அவர்களது முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு, 1,200 பெயர்கள், டைரக்டரியில் இடம் பெற்றுள்ளன. இதற்கான ஆன்-லைன் முகவரி: coconutboard.nic.in/friendsdistrict.htm.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)