பதிவு செய்த நாள்
13 நவ2011
09:54
திருவனந்தபுரம்:கேரளாவில், தென்னை விவசாயிகளின் வசதிக்காக, ஆன்-லைன் டைரக்டரியை, தேங்காய் வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கேரள மாநிலத்தில் தான், நாட்டிலேயே அதிகளவில், தென்னை வளர்ப்பு நடக்கிறது. இங்கு, 15 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில் ஏறி தேங்காய் பறித்துப் போட, 30 ஆயிரம் பேர் தேவை. ஆனால், அதில் பாதிப்பேர் கூட அங்கு இல்லை.இங்கு, தென்னை மரமேறி, தேங்காய் பறித்துப் போட ஆட்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாக உள்ளது. இந்நிலையை மாற்றிட, தேங்காய் வளர்ச்சிக் கழகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இக்கழகம் சார்பில், மாநிலத்தில் வேலையற்ற, நல்ல உடல் திறன் மிக்க இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தென்னை மரங்களில் ஏற பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, வாரந்தோறும் 20 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது, மாநிலத்தில் 1,593 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது மரங்களில் தேங்காய் பறித்துப் போட ஆட்கள் கிடைக்காமல் அவதியுறும் நிலையை மாற்ற, தற்போது, மரமேறுபவர்கள் குறித்தான ஆன்-லைன் டைரக்டரியையும் தேங்காய் வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதிக்கு, "பிரண்ட்ஸ் ஆப் கோகனட் ட்ரீ' என பெயரிடப்பட்டு, மாவட்டம் வாரியாக எங்கெங்கு தென்னை மரம் ஏறுபவர்கள் உள்ளனர், அவர்களது முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு, 1,200 பெயர்கள், டைரக்டரியில் இடம் பெற்றுள்ளன. இதற்கான ஆன்-லைன் முகவரி: coconutboard.nic.in/friendsdistrict.htm.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|