பதிவு செய்த நாள்
13 நவ2011
12:57
சென்னை:தமிழகத்தில், முதன் முறையாக, செங்கல்பட்டு தபால் நிலைய கோட்டத்தில் உள்ள, ஐந்து தபால் நிலையங்களில், சோலார் மின் விளக்குகள் விற்பனை, வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சோலார் மின் விளக்குகளை, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த, நிறுவனத்துடன் இணைந்து, தபால் நிலையம் விற்பனை செய்ய உள்ளது.ஒரு மின் விளக்கு, 549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்விளக்கு, தானே, சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகித்து கொள்ளும். அறையில் ஜன்னலோரம் தொங்க விட்டால் போதும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, இவ்விளக்கு 5 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை எரியும்.
இது குறித்து, செங்கல்பட்டு கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் தங்கவேல் கூறியதாவது:மொபைல் போன்களை சார்ஜ் செய்வதுபோல், சோலார் விளக்குகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்விளக்குகளுக்கு, ஒரு வருடம் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. விளக்கில் வெளிச்சம் குறைவாகவும், வெளிச்சம் அதிகமாகவும் தெரியும் வகையில், எரிய வைக்கும் வசதி உள்ளது. அதிக வெளிச்சம் வரும் வகையில், விளக்கை எரிய வைத்தால், 5 மணி நேரமும், குறைந்த வெளிச்சம் என்றால் 8 மணி நேரமும், விளக்கு எரியும்.விற்பனையைப் பொறுத்து, மற்ற தபால் நிலையங்களிலும், சோலார் விளக்கு விற்பனை விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு தங்கவேல் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|