பதிவு செய்த நாள்
15 நவ2011
00:10
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஜப்பான் பொருளாதாரம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 6 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
ஆனால், நமக்கு பிறகு வர்த்தகம் தொடங்கிய ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டதையடுத்தும், நாட்டின் பணவீக்கம் மேலும் உயர்ந்துள்ளது என்ற செய்தி வெளியானதையடுத்தும் மதியத்திற்கு பிறகு,குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 74.08 புள்ளிகள் குறைந்து, 17,118.74 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,391.99 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,094.43 புள்ளிகள் வரையிலும் சென்றது. சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 20.50 புள்ளிகள் சரிவடைந்து, 5,148.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,228.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,140.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|