பதிவு செய்த நாள்
15 நவ2011
16:43
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் சரிவுடனேயே முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 236.07 புள்ளிகள் குறைந்து 16882.67 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 79.85 புள்ளிகள் குறைந்து 5068.50 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 83 புள்ளிகள் குறைந்து 17035.74 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 22.90 புள்ளிகள் குறைந்து 5125.45 என்ற அளவிலும் உள்ளது. ரியாலிட்டி, வங்கி, வாகனம் மற்றும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குமதிப்புகள் குறைந்ததன் காரணத்தினாலேயே பங்குவர்த்தகம் சரிவுடன் முடிந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|