தங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்புதங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்பு ... விலைவாசியை கட்டுப்படுத்தஉணவுக் குழு: ரேஷனில் காய்கறி விலைவாசியை கட்டுப்படுத்தஉணவுக் குழு: ரேஷனில் காய்கறி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
'சென்செக்ஸ்' 17,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2011
03:11

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. மதியம் வரை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த பங்கு வியாபாரம்,ஐரோப்பிய பங்குச் சந்தைகளில்,வர்த்தகம் சுணக்கம் அடைந்ததையடுத் தும், பல நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை செயல்பாடு சரிவடைந்ததை அடுத்தும், மதியத்திற்கு பிறகு பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, நேற்று, 50.67 ரூபாயாக மேலும் சரிவடைந்தது. இதனால், இறக்குமதி சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து போனது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்:கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இழப்பை கண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு,அதிக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு, இந்நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, இவருடைய குழும நிறுவனங்களுள் ஒன்றான, யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இவர் கொண்டுள்ள பங்குகளை, பிணையமாக அளித்துள்ளார். இதையடுத்து, யுனைடட் புருவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனப் பங்கின் விலை குறைந்து போனது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, இதன் பங்கின் விலையும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்கின் விலையும் சற்று அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 236.07 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,882.67புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,172.09 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,837.56 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும்30 நிறுவனங்களுள், எச்.டி. எப்.சி. வங்கி, டாட்டா மோட்டார்ஸ், சிப்லா ஆகிய மூன்று நிறுவனங் கள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்திருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 79.85 புள்ளிகள் குறைந்து, 5,068.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,158.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,052.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.


Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)