தங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்புதங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்பு ... விலைவாசியை கட்டுப்படுத்தஉணவுக் குழு: ரேஷனில் காய்கறி விலைவாசியை கட்டுப்படுத்தஉணவுக் குழு: ரேஷனில் காய்கறி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.4,165 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2011
03:14

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில்,நறுமணபொருட் கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,165 கோடி ரூபாயாக அதிகரித் துள்ளது. அதேசமயம், அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 19 சதவீதம் சரிவடைந்து, 2 லட்சத்து 37 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது என, நறுமணப் பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆறுமாத காலத்தில்: கடந்த 2010-11ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இதன் ஏற்றுமதி,மதிப்பின் அடிப்படையில், 3,220 கோடி ரூபாய்க்கும், அளவின் அடிப்படையில்,2லட்சத்து94 ஆயிரம் டன் என்ற அளவிற்கும் இருந்தது.சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பில், 92.5 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண் டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 32 சதவீதம் (69.9 கோடி டாலர்) அதிகமாகும்.
மிளகு: நடப்பு நிதியாண்டின் இதே காலத்தில், 311 கோடி ரூபாய்க்கு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 91 சதவீதம் (163 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலத்தில், அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 22 சதவீதம் வளர்ச்சியடைந்து, 9,250 டன்னிலிருந்து, 11 ஆயிரத்து 250 டன்னாக உயர்ந்துள்ளது.சிறிய வகை ஏலக்காய் ஏற்றுமதி,304 சதவீதம் வளர்ச்சி கண்டு,40கோடி ரூபாயிலிருந்து,161 கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது.இது,அளவின் அடிப்படையில்,445சதவீதம் வளர்ச்சி கண்டு,335 டன்னிலிருந்து,1,825 டன்னாக அதிகரித் துள்ளது.இதே காலத்தில், மிளகாய் ஏற்றுமதி, 57 சதவீதம் வளர்ச்சியடைந்து, 776 கோடியிலிருந்து, 815 கோடி ரூபா யாக அதிகரித்துள்ளது. அதேசமயம்,அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி 35 சதவீதம் சரிவடைந்து, 1 லட் ச த்து 28 ஆயிரத்து 250 டன்னிலிருந்து, 83 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.
இஞ்சி: இஞ்சி ஏற்றுமதி, 151 சதவீதம் வளர்ச்சி கண்டு,35 கோடி ரூபாயிலிருந்து,90 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது,அளவின் அடிப்படையில், 44 சதவீதம் வளர்ச்சி கண்டு,5,550 டன்னிலிருந்து,8,000 டன்னாக அதிகரித் துள் ளது.மஞ்சள் ஏற்றுமதி,16 சதவீதம் வளர்ச்சி கண்டு,389 கோடி ரூபாயிலிருந்து,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, அளவின் அடிப்படையில், 83 சதவீதம் உயர்ந்து,28 ஆயிரத்து 500 டன்னிலிருந்து,41 ஆயிரத்து 500டன்னாக அதி கரித்துள்ளது.தனியா ஏற்றுமதி, 20 சதவீதம் சரிவடைந்து,99 கோடிரூபாயிலிருந்து,80கோடி ரூபாயாக குறைந்துள் ளது. இது, அளவின் அடிப்படையில்,50 சதவீதம் குறைந்து,26 ஆயிரத்து 850 டன்னிலிருந்து.13 ஆயிரத்து 500டன் னாக சரிவடைந்துள்ளது.
சீரகம் ஏற்றுமதியில் மாற்றம் ஏதுமில்லை. இருப்பினும், இது, அளவின் அடிப்படையில், 15 சதவீதம் குறைந்து, 18 ஆயிரத்து 800 டன்னிலிருந்து, 16 ஆயிரம் டன்னாக சரிவடைந்துள்ளது. பூண்டு ஏற்றுமதி, 90 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 589 கோடியிலிருந்து, 59 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, அளவின் அடிப்படையில், 93 சதவீதம் சரிந்து, 15 ஆயிரத்து 525 டன்னிலிருந்து, 1,010 டன்னாக குறைந்துள்ளது.கறி மசாலா ஏற்றுமதி, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 103 கோடியிலிருந்து, 115 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, அளவின் அடிப்படையில், 1 சதவீதம் உயர்ந்து, 7,925 டன்னிலிருந்து, 8,000 டன்னாக அதிகரித்துள்ளது.நறுமண எண்ணெய்: புதினா பொருட்கள் ஏற்றுமதி,57 சதவீதம் வளர்ச்சியடைந்து,597 கோடியிலிருந்து,940 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது,அளவின் அடிப்படையில்,4 சதவீதம் சரிவடைந்து,7,930டன்னிலிருந்து,7,650 டன் னாக குறைந்துள்ளது.நறுமண எண்ணெய்மற்றும் ஓலியோ ரெசின் ஏற்றுமதி, 34 சதவீதம் அதிகரித்து, 455 கோடி ரூபாயிலிருந்து, 608 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, அளவின் அடிப்படையில், 11 சதவீதம் சரிவடைந்து, 3,980 டன்னிலிருந்து, 3,550 டன்னாக குறைந்துள்ளது என, நறுமண பொருள்கள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)