தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ... பதிவிறக்க காப்புரிமை பிரச்னையால் மொபைல் போன் பாடல்களுக்கு சில்லறை வியாபாரிகள் கும்பிடு பதிவிறக்க காப்புரிமை பிரச்னையால் மொபைல் போன் பாடல்களுக்கு சில்லறை ... ...
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில்நாட்டின் உருக்கு உற்பத்தி 3.55 கோடி டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2011
01:27


புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், உள்நாட்டில், 3 கோடியே 55 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 3.1 சதவீதம் (3 கோடியே 44 லட்சம் டன்) அதிகம்.சென்ற செப்டம்பர் மாதத்தில், 56 லட்சத்து 64 ஆயிரம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 0.1 சதவீதம் (56 லட்சத்து 49ஆயிரம் டன்) குறைவாகும். அதே சமயம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இதன் உற்பத்தி 3.1 சதவீதம் உயர்ந்து, 50 லட்சத்து 86 ஆயிரம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.பொதுத் துறையைச் சேர்ந்த செயில் நிறுவனம்,சென்ற செப்டம்பர் மாதத் தில்,10.63 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற் பத்தி யை விட, 1.8 சதவீதம் (10.82 லட்சம் டன்) குறைவு.
இதே மாதங்களில், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி, 4 சதவீதம் சரிவடைந்து, 5.32 லட்சம் டன்னாகவும் ( 5.54 லட்சம் டன்), ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 9.3 சதவீதம் சரிவடைந்து, 4.09 லட்சம் டன்னா கவும் (5.40 லட்சம் டன்) குறைந்துள்ளது.இருப்பினும் இதே மாதங்களில், ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் (ஆர்.ஐ.என்.எல்) நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 1.9 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2.68 லட்சம் டன்னாகவும் (2.63 லட்சம் டன்), எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 22.5 சதவீதம் உயர்ந்து, 3.48 லட்சம் டன்னாகவும் ( 2 லட்சத்து 84 ஆயிரம் டன்), ஜிந்தால் ஸ்டீல் (ஜே.எஸ்.பி.எல்.) நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 6.7 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1.91 லட்சம் டன்னாகவும் (1.79 லட்சம்) அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் கச்சா உருக்கு உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 0.8 சதவீதம் குறைந்து, 25.66 லட்சம் டன்னிலிருந்து, 25.45 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இந்நிலையில் வரும்,12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில் (2016-17), உள்நாட்டில் உள்ள நிறுவனங்களின்,உருக்கு உற்பத்தி, 11.30 கோடி டன்னாக இருக்கும் என,மத்திய உருக்கு அமைச் சகத்தின் செயலர் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார். 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், உள்நாட்டில் உருக்கு பொருள் களுக் கான, தேவை, 10.3 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள், உருக்கு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும், தொழில்நுட்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இதனை அமல்படுத்தும் வகையில், உருக்கு அமைச் சகம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது என, மிஸ்ரா மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)