நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில்நாட்டின் உருக்கு உற்பத்தி 3.55 கோடி டன்னாக உயர்வுநடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில்நாட்டின் உருக்கு உற்பத்தி 3.55 ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு ...
பதிவிறக்க காப்புரிமை பிரச்னையால் மொபைல் போன் பாடல்களுக்கு சில்லறை வியாபாரிகள் கும்பிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2011
10:31

சினிமா பாடல்கள் பதிவு மற்றும் பதிவிறக்கம் செய்யும் மொபைல் போன் சில்லறை வியாபாரிகளின் உரிமத் தொகையை குறைக்க, ஐ.எம்.ஐ., அமைப்பு முன்வரவில்லை. இதனால், இந்த பணியை கைவிடும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர். மொபைல் போன் சில்லறை வியாபாரிகள், உரிய அனுமதியின்றி, சி.டி.,க்களிலும், மொபைல் போன்களிலும், வாடிக்கையாளர்களுக்கு பதிவு மற்றும் பதிவிறக்கம் செய்து தருகின்றனர். இந்திய காப்புரிமை சட்டப்படி தவறான இந்த செயலை தடுக்கும் பணியில், ஐ.எம்.ஐ., களம் இறங்கியது. இதையடுத்து, மொபைல் போன் சில்லறை வியாபாரிகளுக்கு, சென்னையில் 22 ஆயிரம் ரூபாய், மாவட்ட தலைநகரங்களில் 18 ஆயிரம் ரூபாய், சிறு நகரங்களில் 15 ஆயிரம் ரூபாய் என, உரிமக் கட்டணம் நிர்ணயித்தது.
உரிமம் பெறாமல் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் வியாபாரிகள் மீது, கடந்த மூன்றாண்டுகளில், சென்னையில், 184 வழக்குகளும், மதுரையில், 142 வழக்குகளும் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு தேவை : இதுகுறித்து, சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த மொபைல் போன் சில்லறை வியாபாரி கோபிநாத் கூறியதாவது: இந்திய காப்புரிமை சட்டம் குறித்து, சமீபத்தில், சென்னையில், காவல்துறையினருக்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது. அவர்களுக்கே இந்த சட்டம் குறித்து பயிற்சி தேவைப்படும்போது, இதுபற்றி எங்களிடம் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல், சட்டரீதியான நடவடிக்கை என, பயமுறுத்துவது நியாயமில்லை.
சினிமா பாடல்கள் உரிமை வாங்கும், எப்.எம்., ரேடியோக்கள் மற்றும் "டிவி' சேனல்களுக்கு, விளம்பர வருவாய் கிடைக்கிறது. மொபைல்போன் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து மாதாந்திர சேவை கட்டணம் பெறுகின்றன. ஆனால், "புளூ டூத்' போன்ற நவீன தொழில்நுட்பத்தால், எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, ஆண்டு உரிமத் தொகையை, 5,000 ரூபாயாக ஐ.எம்.ஐ., நிர்ணயிக்க வேண்டும். இல்லையெனில், இப்பணியை நாங்கள் கைவிட வேண்டியது தான். இவ்வாறு கோபிநாத் கூறினார். குறைக்க முடியாது : ஐ.எம்.ஐ.,யின், தமிழக ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் எஸ்.பி.,யுமான சுப்ரமணியன் (பணி நிறைவு) கூறும்போது: சென்னை, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும், மொபைல்போன் சில்லறை வியாபாரிகள் மீதான எங்கள் நடவடிக்கை தொடரும்.
இந்திய காப்புரிமை சட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆறு மாத ஆய்வுக்கு பின்பே, உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதை குறைக்க முடியாது. கட்டணம் செலுத்த முடியாதோர், பாடல் பதிவிறக்கத்தை தாராளமாக கைவிடலாம். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.
காப்புரிமை கட்டணம் ஏன்? : சோனி மியூசிக், வீனஸ், டிப்ஸ், சரிகம, மானசா உள்ளிட்ட 56, இசைப் பதிவு நிறுவனங்கள், "இந்தியன் மியூசிக் இண்டஸ்ட்ரி' (ஐ.எம்.ஐ.,) அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. சினிமா தயாரிப்பாளரிடமிருந்து பல லட்சம் ரூபாய்க்கு, சினிமா பாடல்களுக்கான உரிமத்தை இந்நிறுவனங்கள் பெறுகின்றன. இந்த பாடல்களை வானொலியிலோ மற்ற வடிவங்களிலோ பயன்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உரிமையை, இந்திய காப்புரிமை சட்டம் பாதுகாக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)