பதிவு செய்த நாள்
17 நவ2011
16:53
புதுடில்லி : மிகப் பெரிய தனியார் துறை தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதால் சர்தேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சலுகை கட்டண சேவைகளையும் ஏர்டெல் குறைத்துள்ளது. சர்வதேச அளவில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கென ரோமிங் கட்டண குறைப்பு உள்ளிட்ட சில சேவைகளையும் ஏர்டெல் வழங்க உள்ளது. இந்த கட்டண குறைப்பிற்கான வாலிடிட்டிடய அரையாண்டு முதல் 6 மாதங்கள் வரை நீடிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்று மொபைலுக்கான வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜி.பி.ஆர்.எஸ்., சேவையில் தற்போதுள்ள ரூ.98 கட்டணத்தில் 1 ஜிபி டேட்டா டவுன்லோட் அளவிற்கு பதிலாக 2 ஜிபி டேட்டா டவுன்லோட் சேவை வழங்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|