பதிவு செய்த நாள்
19 நவ2011
00:26
புதுடில்லி:நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக, நடப்பாண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாதக் காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 26 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, 1 லட்சத்து 76 ஆயிரத்து 480 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த 2009-10ம் முழு நிதியாண்டில், இம்மண்டலங்களின் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டை விட, 43 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 15 ஆயிரத்து 868 கோடி ரூபாயாக இருந்தது.சென்ற செப்டம்பர் மாதம் வரையிலுமாக, நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 2 லட்சத்து 77 ஆயிரத்து 259 கோடி ரூபாய் மதிப்பிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், 7 லட்சத்து 33 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக இம்மண்டலங்களுக்கான ஏற்றுமதிமேம்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|