பதிவு செய்த நாள்
19 நவ2011
00:27
சென்னை:நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சுனில் ரெய்கி கூறியதாவது:நிறுவனத்தின் கார் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக, 16 ஆயிரம் கிளைகளுடன் இயங்கி வரும், இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.
இதன்படி, நிசான் வாடிக்கையாளர்கள், 11.25 சதவீதம் (மாறுபடும் வட்டி விகிதம்) மற்றும் 11.75 சதவீதம் (நிலையான வட்டி விகிதம்) என்ற அளவில், மோட்டார் வாகன கடன்களை, இவ்வங்கியிலிருந்து எளிதாகப் பெறலாம். குறைந்த எளிதான ஆவணங்களைக் கொண்டு, மறைமுகக் கட்டணங்கள் ஏதுமின்றி, வாகனக் கடன்களை விரைவாகப் பெறும் வகையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வினியோகஸ்தர்களுக்கான நிதி திட்டங்களையும், இவ்வங்கி கொண்டுள்ளது.அடுத்த ஆண்டில், நிசான் சன்னி டீசல் வகை கார்களை அறிமுகம் செய்ய உள்ளோம். மேலும், தற்போது, 47 ஆக உள்ள முகவர்களின் எண்ணிக்கையை, 70 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, சுனில் ரெய்கி கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|