பதிவு செய்த நாள்
19 நவ2011
00:28
சென்னை:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின், சர்வதேச வாகன விற்பனை (ஜாகுவர், லேண்ட் ரோவர் உட்பட), சென்ற அக்டோபர் மாதத்தில், 95 ஆயிரத்து 789ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 10 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டின், அக்டோபர் வரையிலான ஏழு மாதக் காலத்தில், இந்நிறுவனத்தின் சர்வதேச ஒட்டுமொத்த வாகன விற்பனை, 6 லட்சத்து 42 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, தென்கொரியா, தாய்லாந்து, ஸ்பெயின் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.இந்நிறுவனம், சென்ற அக்டோபர் மாதத்தில், உலகளவில், 43 ஆயிரத்து 184 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 6 சதவீதம் அதிகமாகும்.
அக்டோபர் வரையிலான ஏழு மாதக் காலத்தில், இதன் ஒட்டுமொத்த வர்த்தக வாகனங்கள் விற்பனை, 17 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, 3 லட்சத்து 21 ஆயிரத்து 688ஆக உயர்ந்துள்ளது.இந்நிறுவனத்தின் சர்வதேச பிராண்டான, ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் விற்பனை, சென்ற அக்டோபர் மாதத்தில், 39 சதவீதம் வளர்ச்சி கண்டு, 26 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஜாகுவார் கார் விற்பனை, 63 சதவீதம் உயர்ந்து, 5,231 ஆகவும், லேண்ட் ரோவர் கார் விற்பனை, 34 சதவீதம் அதிகரித்து, 20 ஆயிரத்து 927ஆகவும் உயர்ந்துள்ளது.டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில், பியட் கார்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் கொண்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|