பதிவு செய்த நாள்
19 நவ2011
14:11
புதுடில்லி : ரயிலில் ஏ.சி.வகுப்பு பயணம், பிரத்யேக எடை குறைப்பு திட்டங்கள், எக்ஸ்கியூட்டிவ் மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவைகளும் இனி சேவை வரிக்குள் வர இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக, மத்திய நிதித்துறை அமைச்சகம், சேவை வரிக்குள் உட்படும் நிறுவனங்களின் புதிய பட்டியல் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 28 நிறுவனங்கள், சேவை வரிக்குள் உட்படாது என்று இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சேவை வரிக்குள் உட்படாத சேவைகளின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுன்படி, எந்தவொரு தனிமனிதன், தனது பொருளாதார நிலையின் அடிப்படையில் மேற்கொண்ட சிறப்பு வசதியின் மூலம், பண சம்பந்தமான பலனை பெறுகிறானோ, இல்லையோ அவன் சேவை வரிக்கு <உட்பட்டவன் ஆகிறான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|