பதிவு செய்த நாள்
19 நவ2011
16:31
புதுடில்லி : மூன்றாம் தலைமுறை (3ஜி) சேவை, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, மதிப்புக்கூட்டு சேவைகள் வழங்கும் நிறுவனம் மற்றும் அதுதொடர்பான உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் நடைபெற்ற 8வது பிராட்பேண்ட் டெக் இந்தியா கருத்தரங்கில், பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவன தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஆர் கே உபத்யாய் கூறியதாவது, மதிப்புக்கூட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், 3ஜி சேவையின் மூலம், 2015ம் ஆண்டிற்குள் ரூ. 3,600 கோடி வருமானம் ஈட்ட தீர்மானித்திருப்பதாகவும், அதேபோல், 3ஜி சேவை தொடர்பான உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் 2015ம் ஆண்டிற்குள், ரூ. 16.500 கோடி வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். இதுமட்டுமல்லாது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீபிஓ துறைகளில், 2010--2015ம் ஆண்டிலான காலகட்டத்தில், ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|