பதிவு செய்த நாள்
20 நவ2011
14:16
இந்தூர் : மத்திய பிரதேச மண்டலத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வருமானம் 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அரையாண்டில் இந்நிறுவனம் ரூ.402 கோடியை லாபமாக பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு முடிவில் இந்நிறுவனம் ரூ.370 கோடியை லாபமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சில குறிப்பிட்ட வழிகாட்டுதலின் பேரில் லேண்ட்லைன் இணைப்புக்கள், லேப்டாப் டேட்டா கார்டு, தேவையற்ற காரணங்களால் இணைப்புக்கள் பழுதடைதல், பராமரித்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல்., தீர்மானித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 3 மற்றும் 4வது காலாண்டுகளில் நிறுவன வருமானத்தை 15 சதவீதம் வரை உயர்த்த தீர்மானித்திருப்பதாக பி.எஸ்.என்.எல்., மத்திய பிரதேச மற்றும் சண்டிகர் மண்டல தலைமை பொது மேலாளர் என்.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|