பதிவு செய்த நாள்
20 நவ2011
15:51
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, சுற்றுசூழலுக்கு ஆபத்து விளைவிக்காத சி.என்.ஜி.,(கம்ப்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்) வசதி கொண்ட மேலும் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது சி.என்.ஜி., வசதி கொண்ட 5 மாடல் கார்களை மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. அவை ஆல்டோ, வேகன்ஆர், எஸ்டிலோ, வேன் வகைகளான எகோ மற்றும் சீடன் எஸ்.எக்ஸ்.4 ஆகியனவாகும். இந்த சி.என்.ஜி., வசதி கொண்ட கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் சி.என்.ஜி., வசதி கொண்ட மேலும் பல கார்களை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் காலகட்டத்தில் சூற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கார்கள் தயாரிப்பில் ஆட்டோ துறை இன்னும் பின்தங்கி உள்ளதாகவும், இதனால் சி.என்.ஜி., வசதி கொண்ட வாகனங்களுக்கு அரசு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். இந்திய வாடிக்கையாளர்களின் வசதிக்காக சி.என்.ஜி., வசதி கார்கள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் கார்களையும் தயாரிக்கும் பணியில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இறங்கி உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|