பதிவு செய்த நாள்
20 நவ2011
16:47
புதுடில்லி : இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் எரிசக்தி துறையில் அடுத்த 2 ஆண்டுகளுக்காக 1.5 பில்லியன் டாலர்களை உலகவங்கி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இதற்கான திட்டங்கள் இறுதி செய்யப்படவில்லை எனவும், பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உலகவங்கிக்கான இந்திய எரிசக்தி குழு தலைவர் ஆஷிஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இந்த தொகை தற்போது முதல் 2014ம் ஆண்டுக்குள் 1.5 பில்லியன் டாலரில் இருந்து மேலும் விரிவாக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக உலகத்தரத்திலான திறன்களை இந்தியாவிற்கு வழங்கவும் உலக வங்கி திட்டமிட்டிருப்பதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|