பதிவு செய்த நாள்
22 நவ2011
09:49
மும்பை : நேற்றைய வர்த்தகநேர முடிவில், சென்செக்ஸ் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்திருந்த நிலையில், இன்று 151 புள்ளிகள் ஏற்றத்துடன் பங்குவர்த்தகம் துவஙகியிருப்பது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 151.20 புள்ளிகள் அதிகரித்து 16,097.30 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 45.45 புள்ளிகள் அதிகரித்து 4,823.80 என்ற அளவிலும் உள்ளது. ரியாலிட்டி, மெட்டல், கேப்பிடல் கூட்ஸ், வாகனம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்ததன் காரணத்தினால், பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளதாக பங்குவர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஆசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ள போதிலும், அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவுடனேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|