பதிவு செய்த நாள்
22 நவ2011
15:33
இந்தியாவில், அமெரிக்காவை சேர்ந்த போர்டு கார் நிறுவனம் கார் விற்பனையில் ஈடுட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஜூலை மாதம், புதிய பியஸ்டா காரை அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த கார் கிடைக்கிறது. ஆனால், பெட்ரோல் காரின் விலை ரூ.8.23 லட்சம் என்றும், டீசல் காரின் விலை ரூ.9.27 லட்சம் என்று அறிவித்தது, பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு காரின் விலை அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து, ஒட்டு மொத்தமாக கார் விற்பனையில் ஏற்பட்ட தொய்வு, போர்டு நிறுவனத்தை யோசிக்க வைத்தது. இதை தொடர்ந்து, அக்டோபர் மாதம், பியஸ்டா பெட்ரோல் காரின் விலை ரூ.50 ஆயிரம் அளவுக்கு குறைக்கப்பட்டது. தற்போது மேலும் ரூ.25 ஆயிரம் குறைக்கப்பட்டு, ரூ.75 ஆயிரம் தள்ளுபடி விலையில் பியஸ்டா கார் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல், ஹோண்டா சிட்டி காருடன், புதிய பியஸ்டா கார் கடும் போட்டியில் ஈடுபட முடியும் என்றே, நிபுணர்கள் கருதுகின்றனர். இதேபோல, பியஸ்டா டீசல் கார் விலையையும் போர்டு நிறுவனம் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|