பதிவு செய்த நாள்
24 நவ2011
02:06
சென்னை:டி.வி.எஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், ஜி.எம்.ஆர். ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 24 மணிநேர கார்பழுதுபார்ப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் ஆர். ஸ்ரீவத்சன் கூறியதாவது:
ஜி.எம்.ஆர் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய விமான நிலையமொன்றில், முதன் முதலாக கார் பழுதுபார்ப்பு சேவையை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்படும் இத்தகைய சேவை, இதர விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு ஸ்ரீவத்சன் தெரிவித்தார். ஐதராபாத் விமான நிலையம் மற்றும் அதன் ”ற்றுப் பகுதியில், மை டிவிஎஸ், பயணிகள் கார்களில் ஏற்படும் கோளாறுகளை உடனடியாக சரி செய்து தரும் பணியை மேற்கொள்ளும். டயர்களை மாற்றுவது, மின்கலன் செயல்பாட்டை சரிசெய்வது, பிரேக் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து தரும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|