பதிவு செய்த நாள்
25 நவ2011
00:28
பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பிம் பேங்க்ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான இந்தியாபேக்டரிங் அண்டு பைனான்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், இதன் வர்த்தக விரிவாக்க திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன் முதன்மை நிர்வாக அதிகாரி சுதீப் சரபத்கிகாரி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:பொருளாதார வளர்ச்சிக்கு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. மொத்த தொழில் துறை உற்பத்தியில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 45 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 40 சதவீதமாகவும் உள்ளது. இத்துறையின் வாயிலாக, 4 கோடியே 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மேலும், இத்துறை மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது. எனவே, இதன் முக்கியத்துவம் உணர்ந்து, இந்நிறுவனங்களுக்கான கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தில் வர்த்தக விரிவாக்க திட்டங்களை விரைவாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம்.நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில் 7 கிளைகள் உள்ளன. சொத்து மதிப்பு 700 கோடியாகவும் விற்றுமுதல், 1,500 கோடி ரூபாயாக உள்ளது.
இதில், தமிழகத்தின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது.இதன் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் கோவையில் புதிய கிளை திறக்கப்பட உள்ளது.அடுத்த மூன்று ஆண்டுகளில், நிறுவனத்தின் விற்று முதலை மூன்று மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நிறுவனம் பல்வேறு விரிவாக்க திட்டங்களையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு சுதீப் சரபத்கிகாரி கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|