திருப்பதி ஏழுமலையானுக்கு 168 வைர கற்கள் காணிக்கைதிருப்பதி ஏழுமலையானுக்கு 168 வைர கற்கள் காணிக்கை ... சிமென்ட் விலை உயர வாய்ப்பு சிமென்ட் விலை உயர வாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியா பேக்டரிங் தமிழகத்தில் விரிவாக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2011
00:28

பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பிம் பேங்க்ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான இந்தியாபேக்டரிங் அண்டு பைனான்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், இதன் வர்த்தக விரிவாக்க திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன் முதன்மை நிர்வாக அதிகாரி சுதீப் சரபத்கிகாரி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:பொருளாதார வளர்ச்சிக்கு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. மொத்த தொழில் துறை உற்பத்தியில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 45 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 40 சதவீதமாகவும் உள்ளது. இத்துறையின் வாயிலாக, 4 கோடியே 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மேலும், இத்துறை மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது. எனவே, இதன் முக்கியத்துவம் உணர்ந்து, இந்நிறுவனங்களுக்கான கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தில் வர்த்தக விரிவாக்க திட்டங்களை விரைவாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம்.நிறுவனத்திற்கு, நாடு தழுவிய அளவில் 7 கிளைகள் உள்ளன. சொத்து மதிப்பு 700 கோடியாகவும் விற்றுமுதல், 1,500 கோடி ரூபாயாக உள்ளது.
இதில், தமிழகத்தின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது.இதன் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் கோவையில் புதிய கிளை திறக்கப்பட உள்ளது.அடுத்த மூன்று ஆண்டுகளில், நிறுவனத்தின் விற்று முதலை மூன்று மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நிறுவனம் பல்வேறு விரிவாக்க திட்டங்களையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு சுதீப் சரபத்கிகாரி கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)