பதிவு செய்த நாள்
25 நவ2011
12:53
மும்பை : அரசின் பங்குகளை வெளிப்படை சந்தை விற்பனையில் ரூ.9435.48 கோடிக்கு ரிசர்வ் வங்கி விலைக்கு வாங்கி உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த ரூ.10,000 கோடியை விட குறைவானதாகும். வெளிப்படை சந்தை விற்பனையில் மொத்தம் 4 வகையான பாதுகாப்புக்களின் அடிப்படையில் விற்பனை நடத்தப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்குகளின் கூப்பன் மதிப்பு 2017ல் 7.99 சதவீதம் அதிகரித்து ரூ.648.86 கோடியாகவும், 2018ல் இதன் கூப்பன் மதிப்பு 7.83 சதவீதம் அதிகரித்து ரூ.2,288.6 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரிசர்வ் வாங்கி உள்ள பங்குகளின் கூப்பன் மதிப்பு 2021ல் 7.80 சதவீதம் உயர்ந்து ரூ.3,802.87 கோடியாகவும், 2011ல் 8.13 சதவீதம் உயர்ந்து ரூ.2695.11 கோடி மதிப்புடையதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|