பதிவு செய்த நாள்
25 நவ2011
15:09
புதுடில்லி : நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஏர்செல் ஆகியன தங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான ஐபோன் 4எஸ் வகை ஸ்மார்ட்போனை இன்று நள்ளிரவு அறிமுகம் செய்ய உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.44,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் 16 ஜிபி திறன் மாடல்களுக்கு ரூ.44,500ம், 32 ஜிபி திறன் மாடல்களுக்கு ரூ.50,900ம், 64 ஜிபி திறன் மாடல்களுக்கு ரூ.57,500 என விலை நிர்ணயித்துள்ளன. இந்த புதிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐபோன் மாடலின் முன்பதிவு நவம்பர் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள 4எஸ் மாடலின் முந்தைய மாடல்களான ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐபோன் 4 ஆகியவற்றின் விலைகள் முறையே ரூ.20,900 மற்றும் ரூ.37,900 ஆகும். இவ்விரு மாடல்களும் 8 ஜிபி திறன் கொண்டவைகளாகும். தற்போது வெளியிடப்பட உள்ள ஐபோன் 4 எஸ் மாடல் 3.5 இன்ச் மற்றும் 960 X 640 பிக்செல் திரை மற்றும் டச் ஸ்கிரீன் கொண்டதாகும். ட்யூயல் கோர் ஏ5 சிப் திறன், புதிய ஐ.ஓ.எஸ்., 5 விளையாட்டு செயல்பாடு, அதிவேக பிரவுசிங் ஆகியவற்றை கொண்டதாகும். மேலும் 8 எம்.பி., கேமிரா, 1080பி ஹச்.டி., வரை வீடியோ பதிவு, வி.ஜி.ஏ., வீடியோ கேமிரா ஆகியவற்றுடன் சிரி எனப்படும் உதவியாளரையும் கொண்டுள்ளது. இந்த ஐபோன் பயன்படுத்துவோர் சிரி என அழைத்தால், அது தனது குரலில் அருகில் உள்ள ரெஸ்டாரன்ட், தற்போது இருக்கு இடம் பற்றிய குறிப்பு ஆகியவற்றை தெரிவிக்கும். மேலும் அழைப்புக்களை ஏற்க, மெசேஜ் அனுப்ப, முக்கிய சந்திப்புக்களை நினைவுபடுத்த உள்ளிட்ட உதவிகளுக்கு சிரி சேவையை அனுகும் வசதி செய்யப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|