பதிவு செய்த நாள்
26 நவ2011
00:26
சென்னை:பிஸ்கட் உள்ளிட்ட நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ள பிரிட்டானியா நிறுவனம், புதிய தயாரிப்பாக, ஓட்ஸ் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, பிரிட்டானியா நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) அனுராதா நரசிம்மன் கூறியதாவது:நிறுவனத்தின், அனைத்து தயாரிப்புகளுக்கும் மக்களிடத்தில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதை பூர்த்தி செய்யும் வகையில், ஓட்ஸ் விற்பனையில் களம் இறங்கியுள்ளோம். ஊட்டச்சத்து நிறைந்த, ஓட்ஸ், எளிதில் செரிமானமாகும்; சிறந்த உணவு பொருளாகவும் திகழ்கிறது. இந்தியாவில், ஓட்சின் சந்தை மதிப்பு, 150 கோடி ரூபாயாக உள்ளது.
இது, ஆண்டுதோறும் 30 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.நாட்டில், ஓட்ஸ் பயன்பாட்டில், 44 சதவீத பங்களிப்பை கொண்டு, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது, ஆரோக்கியத்தின் அவசியத்தை, தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. நாட்டில், 100ல் மூன்று பேர் மட்டுமே ஓட்சை பயன்படுத்துகின்றனர்.ஸ்ட்ராபெரி, மல்டிகிரெய்ன், கிளாசிக், சேவரி ஆகிய நான்கு வகைகளில், 200 கிராம் முதல், 1 கிலோ வரையிலான பாக்கெட்டுகளில், ஓட்ஸ் உணவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம், ஓட்ஸ் வர்த்தகத்தில், 25 சதவீத சந்தை பங்களிப்பை பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுராதா நரசிம்மன் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|