புதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டுபுதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு ... கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 கோடி கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 ... ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
பிரிட்டானியா நிறுவனம்ஓட்ஸ் உணவுப் பொருள் விற்பனையில் களம் இறங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2011
00:26

சென்னை:பிஸ்கட் உள்ளிட்ட நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ள பிரிட்டானியா நிறுவனம், புதிய தயாரிப்பாக, ஓட்ஸ் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, பிரிட்டானியா நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) அனுராதா நரசிம்மன் கூறியதாவது:நிறுவனத்தின், அனைத்து தயாரிப்புகளுக்கும் மக்களிடத்தில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதை பூர்த்தி செய்யும் வகையில், ஓட்ஸ் விற்பனையில் களம் இறங்கியுள்ளோம். ஊட்டச்சத்து நிறைந்த, ஓட்ஸ், எளிதில் செரிமானமாகும்; சிறந்த உணவு பொருளாகவும் திகழ்கிறது. இந்தியாவில், ஓட்சின் சந்தை மதிப்பு, 150 கோடி ரூபாயாக உள்ளது.
இது, ஆண்டுதோறும் 30 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.நாட்டில், ஓட்ஸ் பயன்பாட்டில், 44 சதவீத பங்களிப்பை கொண்டு, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது, ஆரோக்கியத்தின் அவசியத்தை, தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. நாட்டில், 100ல் மூன்று பேர் மட்டுமே ஓட்சை பயன்படுத்துகின்றனர்.ஸ்ட்ராபெரி, மல்டிகிரெய்ன், கிளாசிக், சேவரி ஆகிய நான்கு வகைகளில், 200 கிராம் முதல், 1 கிலோ வரையிலான பாக்கெட்டுகளில், ஓட்ஸ் உணவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம், ஓட்ஸ் வர்த்தகத்தில், 25 சதவீத சந்தை பங்களிப்பை பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுராதா நரசிம்மன் கூறினார்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)