பதிவு செய்த நாள்
26 நவ2011
00:28
புதுடில்லி:அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டங்களில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், 1,000 கோடி டாலர் (50 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு மேற்கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் டாலர் புழக்கம் அதிகரிக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் அடிப்படை கட்டமைப்பு துறையில், வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), 1 லட்சம் கோடி டாலர் (50 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு, முதலீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு, வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், டாலர் வரத்தை அதிகரிக்கும் நோக்குடன், ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்ற வாரம், நிறுவனங்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான உச்சவரம்பு, 2,500 கோடி டாலராக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், அடிப்படை கட்டமைப்பு நிதியத்தில், அயல்நாடு வாழ் இந்தியர்கள், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள, ரிசர்வ் வங்கி உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் வெளியிடும், அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த கடன் பத்திரங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் ஆகியவற்றில், அன்னிய நிதி நிறுவனங்கள், 2,500 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|