புதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டுபுதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு ... அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு:மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு:மத்திய வர்த்தக ... ...
கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2011
00:28

புதுடில்லி:அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டங்களில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், 1,000 கோடி டாலர் (50 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு மேற்கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் டாலர் புழக்கம் அதிகரிக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் அடிப்படை கட்டமைப்பு துறையில், வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), 1 லட்சம் கோடி டாலர் (50 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு, முதலீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு, வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், டாலர் வரத்தை அதிகரிக்கும் நோக்குடன், ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்ற வாரம், நிறுவனங்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான உச்சவரம்பு, 2,500 கோடி டாலராக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், அடிப்படை கட்டமைப்பு நிதியத்தில், அயல்நாடு வாழ் இந்தியர்கள், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள, ரிசர்வ் வங்கி உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் வெளியிடும், அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த கடன் பத்திரங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் ஆகியவற்றில், அன்னிய நிதி நிறுவனங்கள், 2,500 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)