கட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 கோடிகட்டமைப்பு நிதியத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் முதலீட்டு வரம்பு ரூ. 50,000 ... ... ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம்:கிராமங்களில் கட்டுமான இயந்திர வணிகத்தை விரிவுபடுத்த திட்டம் ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம்:கிராமங்களில் கட்டுமான இயந்திர வணிகத்தை ... ...
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு:மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2011
00:29

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி, 40 ஆயிரத்து, 281 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 42.2 சதவீதம் (28 ஆயிரத்து 317 கோடி ரூபாய்) அதிகமாகும்.அத்தியாவசியப் பொருட்கள் பிரிவில், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், மோட்டார் வாகனம், பால் மற்றும் பானங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு, மேற்கண்ட பொருள்களின் இறக்குமதி மீது, அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு தொழில் துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இவற்றின் இறக்குமதியை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.கணக்கீட்டுக் காலத்தில், பருப்பு வகைகள் இறக்குமதி, 3,342.95 கோடி ரூபாயாக இருந்தது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3,280 கோடி ரூபாயாக காணப்பட்டது.இதே காலத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி, 66 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 998 கோடியிலிருந்து, 18 ஆயிரத்து 244 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஆல்கஹால் கலந்த பானங்கள், நறுமணப் பொருட்கள் இறக்குமதி முறையே, 47.5 சதவீதம் மற்றும் 68.3 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளான குடைகள், பூட்டுகள், பொம்மைகள் மற்றும் கண்ணாடி சாமான்கள் ஆகியவற்றின் இறக்குமதி, 48.6 சதவீதம் உயர்ந்து, 839.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மோட்டார் வாகனத் துறையின் இறக்குமதி, 103.5 சதவீதம் அதிகரித்து, 789.67 கோடி ரூபாயிலிருந்து, 1,607 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இதே காலத்தில் உணவு தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள், தேயிலை, காபி போன்றவற்றின் இறக்குமதி முறையே, 93.4 சதவீதம், 28.4 சதவீதம், 10.2 சதவீதம் என்றளவில் சரிவடைந்துள்ளது.நாட்டின் மொத்த இறக்குமதியில், அத்தியாவசியப் பொருட்கள் பிரிவு, 4.8 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி, 8 லட்சத்து, 47 ஆயிரத்து, 987 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 36.5 சதவீதம் (6 லட்சத்து 21 ஆயிரத்து 89 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இந்தோனேஷியா, சீனா, மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து, மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதே சமயம், மியான்மர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)