பதிவு செய்த நாள்
26 நவ2011
00:33
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு நன்கு இருந்ததையடுத்து, மதியம் வரை, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், சுமாராக இருந்தது. ஆனால், ஐரோப்பிய பங்கு வர்த்தகம், சுணக்கம் கண்டதை அடுத்து, மதியத்திற்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது.
பன்முக சில்லறை வர்த்தகத்தில், 51 சதவீத அளவிற்கும், ஒரே பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில், 100 சதவீத அளவிற்கும் அன்னிய நேரடி முதலீட்டிற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பான்டலூன், விஷால் ரீடெய்ல், சி.இ.எஸ்.சி., டிரெண்ட், புரோவோக் மற்றும் ஷாப்பஸ் ஸ்டாப் ஆகிய நிறுவன பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.இந்திய விமானச் சேவை நிறுவனங்கள், சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங், இன்று விமானச் சேவை நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து, கிங்பிஷர் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை, 8-12.5 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 163.06 புள்ளிகள் சரிவடைந்து, 15,695.43 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 15,981.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,645 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 46.40 புள்ளிகள் குறைந்து, 4,710.05 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 4,767.30 புள்ளிகள் வரையிலும், 4,693.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|