பதிவு செய்த நாள்
26 நவ2011
10:07
திருப்பதி : திருமலை வெங்கடேஷ்வர சுவாமி கோயில் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட நாணயங்களில் பழமையான இந்திய நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு காசுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரகம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 20 ஆண்டுகளில் திருப்பதி உண்டியலில் மொத்தம் 18 டன் அளவிற்கு நாணயங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. நாணய ஆய்வு குழுவினரால் இந்த நாணயங்கள் தரம் மற்றும் பண்டைய மதிப்பு ஆகியன ஆராயப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உண்டியலில் செப்பு, தாமிரம், ஈயம் ஆகியவற்றால் ஆன நாணயங்களும் உள்ளன.மொத்தமுள்ள 18 டன் நாணயத்தில், 6 டன்னிற்கும் அதிகமான காசுகள் அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு காசுகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் 6 டன்னிற்கும் அதிகமான வெளிநாட்டு காசுகள் உண்டியலில் வசூலாகி இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் எந்த வங்கியும் இந்த நாணயங்களை பெற்றுக் கொள்ள முன்வராததால், அரியவகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு நாணய அருங்காட்சியகம் ஒன்று அமைக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|