பதிவு செய்த நாள்
26 நவ2011
12:37
புதுடில்லி : தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு டூப்பர் எஜூகேஷன் எனப்படும் ஆன்லைன் கல்வியை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கிரேசெல் 18 நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை வழங்க பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் விரும்பும் துறை தொடர்பான பாடங்கள் வீடியோ மூலம் எடுக்கப்படும் எனவும், ஆன்லைன் தேர்வுகளும் அதற்கான புத்தகங்கள் உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சேவை, மாணவர்கள் தங்களின் வீட்டு பாடங்களை மேற்கொள்வதற்கும், தேர்வுக்கு தங்களை தயார் செய்வதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை ரூ.99 மாத வாடகையில் கிராமபுறங்களுக்கும், ரூ.250 மாத வாடகையில் நகர்புறங்களுக்கும் வழங்கி வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய சேவையில் பிசிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட பிற கல்விப்பிரிவின் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய சேவை ரூ.150 மாத வாடகையில் வழங்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|