பதிவு செய்த நாள்
26 நவ2011
14:55
புதுடில்லி : கட்டுமான துறையில் நேரடி அந்நிய முதலீடுகளின் தேவை அதிகரித்து வருவதால் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.4000 கோடி முதலீட்டில் 13 வணிக வளாகங்களை அமைக்க யூனிடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் 5 வணிக வளாகங்களை பெரு நகரங்கள் மற்றும் மாநில தலைநகரங்களில் அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது 9 வணிக வளாகங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் 4 வணிக வளாகங்களுக்கான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், மொத்த 4 மில்லியன் சதுரடியில் 13 வணிக வளாகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் யூனிடெக் தலைவர் முனிஷ் பால்தேவ் தெரிவித்துள்ளார். தற்போது கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள் 2013ம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாகவும், புதிதாக கட்டப்பட உள்ள வளாகங்களின் கட்டுமான பணிகள் 2012ம் ஆண்டின் 3வது காலாண்டில் துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|