பதிவு செய்த நாள்
27 நவ2011
09:20
உரம் விலையை நிர்ணயம் செய்து வந்த மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய பிறகு, ஓராண்டில் உரங்களின் விலை, மூட்டைக்கு, 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சவுந்தர்ராஜன் கூறியதாவது: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம், ஒரு மொத்த விற்பனையகம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமும் உரம் வினியோகம் செய்யப்படுகிறது. உரங்களின் விற்பனை விலை நிர்ணயம் செய்வது, கடந்தாண்டு வரை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2010 ஏப்ரல் முதல், மத்திய அரசு விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகிக் கொண்டது. உரங்களின் உற்பத்தியாளர்களே, உரங்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உரங்களுக்கான மானியத்தை, சத்துக்களின் அடிப்படையில் நிலை நிறுத்திவிட்டு, விற்பனை விலையை அந்தந்த உற்பத்தியாளர்களே நிர்ணயித்து வருகின்றனர். எனவே, விவசாயிகள் உரங்களை வாங்கும்போது, அந்த மூட்டையின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலை என்ன உள்ளதோ, அதை மட்டும் கொடுத்து வாங்க வேண்டும். ஒரு உரம் மூட்டை, 50 கிலோ எடை கொண்டது. கடந்தாண்டு ஒரு மூட்டை டி.ஏ.பி., உரம், 510 ரூபாயாக இருந்தது இன்று, 910 ரூபாயாகவும், 280 ரூபாயாக இருந்த பொட்டாஷ் உரம், 565 ரூபாயாகவும், 450 ரூபாயாக இருந்த காம்ப்ளக்ஸ் உரம், 800 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு சவுந்தர்ராஜன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|