ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ... பிஎஸ்என்எல்.,ரீசார்ஜ் கார்டுகளுக்கு முழு டாக் டைம் சலுகை : பொது மேலாளர் தகவல் பிஎஸ்என்எல்.,ரீசார்ஜ் கார்டுகளுக்கு முழு டாக் டைம் சலுகை : பொது மேலாளர் ... ...
விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2011
09:20

உரம் விலையை நிர்ணயம் செய்து வந்த மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய பிறகு, ஓராண்டில் உரங்களின் விலை, மூட்டைக்கு, 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சவுந்தர்ராஜன் கூறியதாவது: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம், ஒரு மொத்த விற்பனையகம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமும் உரம் வினியோகம் செய்யப்படுகிறது. உரங்களின் விற்பனை விலை நிர்ணயம் செய்வது, கடந்தாண்டு வரை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2010 ஏப்ரல் முதல், மத்திய அரசு விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகிக் கொண்டது. உரங்களின் உற்பத்தியாளர்களே, உரங்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உரங்களுக்கான மானியத்தை, சத்துக்களின் அடிப்படையில் நிலை நிறுத்திவிட்டு, விற்பனை விலையை அந்தந்த உற்பத்தியாளர்களே நிர்ணயித்து வருகின்றனர். எனவே, விவசாயிகள் உரங்களை வாங்கும்போது, அந்த மூட்டையின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலை என்ன உள்ளதோ, அதை மட்டும் கொடுத்து வாங்க வேண்டும். ஒரு உரம் மூட்டை, 50 கிலோ எடை கொண்டது. கடந்தாண்டு ஒரு மூட்டை டி.ஏ.பி., உரம், 510 ரூபாயாக இருந்தது இன்று, 910 ரூபாயாகவும், 280 ரூபாயாக இருந்த பொட்டாஷ் உரம், 565 ரூபாயாகவும், 450 ரூபாயாக இருந்த காம்ப்ளக்ஸ் உரம், 800 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு சவுந்தர்ராஜன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)