பதிவு செய்த நாள்
27 நவ2011
11:18
புதுடில்லி : லண்டினில் பொதுத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளதால் லண்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் விமானங்கள் ஆகியவற்றை வரும் புதன்கிழமை( நவம்பர் 30) வரை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அமிர்தசரசில் இருந்து டில்லி வழியாக லண்டன் செல்லும் விமானம் ஏஐ -115, லண்டனில் இருந்து டில்லி வரும் விமானம் ஏஐ - 116, டில்லியிலிருந்து லண்டன் செல்லும் ஏஐ - 111 விமானம் மற்றும் லண்டனில் இருந்து இந்தியா வரும் விமானம் ஏஐ - 112 ஆகிய விமானங்களை ஏர்இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராத்தில் மொத்தம் 7.5 லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரம், மக்கள் நல சேவை, கல்வி மற்றும் அரசுதுறை உள்ளிட்ட 4 முக்கிய துறைகளின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் லண்டன் விமான நிலையங்களில் சுகாதார பிரிவுகள் மற்றும் சோதனை பிரிவுகள் வெறிச்சேடி கிடக்கின்றன. ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு டிசம்பர் முதல் தேதிக்கு பயணம் மாற்றி தரப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|