பதிவு செய்த நாள்
28 நவ2011
00:07
குன்னூர்: உள்நாட்டு ஏற்றுமதி வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால், குன்னூர் தேயிலை ஏலத்தில் 2.40 கோடி ரூபாய் மதிப்பு தேயிலை தூள் தேங்கியது.நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், குன்னூர் ஏல மையத்தின் மூலம் வாரந்தோறும் விற்கப்படுகிறது. விற்பனை எண் 47க்கான ஏலம், இரு நாட்களுக்கு முன் நடந்தது; 16.69 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இலை ரகம் 12.16 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 4.54 லட்சம் கிலோ அடங்கும்.வழக்கமாக பங்கெடுக்கும் கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் உட்பட வட மாநில வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்தது. ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை, பாகிஸ்தான், ரஷ்யா நாட்டு வர்த்தகர்கள் மட்டும் பங்கேற்று, கணிசமான அளவு தேயிலை தூளை வாங்கினர். வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்த நிலையால், விற்பனைக்கு வந்த தேயிலை தூளில், 2.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 சதவீத தூள் தேங்கியது. விலை நிலவரத்தை பொறுத்தவரை, சி.டி.சி., ரகத்துக்கு அதிகபட்சம் 140 ரூபாய் கிடைத்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|