பதிவு செய்த நாள்
28 நவ2011
00:10
புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தாதுப் பொருட்கள் உற்பத்தி, 13 ஆயிரத்து, 378 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 5.64 சதவீதம் குறைவு என, சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பின் அடிப்படையில், 5,626 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இது, மொத்த தாதுப் பொருட்கள் உற்பத்தியில், 41 சதவீதமாகும்.இதே மாதத்தில், 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, இரும்புத் தாது (2,490 கோடி ரூபாய்), இயற்கை எரிவாயு(1,452 கோடி ரூபாய்), பழுப்பு நிலக்கரி (311 கோடி ரூபாய்), சுண்ணாம்புக் கல் (267 கோடி ரூபாய்) ஆகியவற்றின் உ ற்பத்தி உள்ளது.நாட்டில், உற்பத்தி செய்யப்படும் தாதுப் பொருட்களில், மேற்கண்ட ஆறு பொருட்களின் பங்களிப்பு, 95 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|