பதிவு செய்த நாள்
28 நவ2011
00:11
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-நடப்பு 2011-12ம் பருத்தி சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,- செப்.,), மத்திய வேளாண் அமைச்சகம், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.கையிருப்புஉள்நாட்டு சந்தையில் ஒரு குவிண்டால் பருத்தி 4,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது, சென்ற ஆண்டு 6,000 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் விவசாயிகள், விலை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில், அதிக அளவில் பருத்தியை கையிருப்பு இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய வேளாண் அமைச்சகம், ஒரு குவிண்டால் உயர் ரக பருத்தியின், குறைந்தபட்ச ஆதரவு விலையை 4,200 ரூபாய் என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு, 360 கிலோ கொண்ட ஒரு கேண்டி பருத்தியின் விலை 75 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. நடப்பு ஆண்டில், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால், உள்நாட்டில் பருத்திக்கான தேவை குறைந்து, அதன் விலை 50 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது, ஒரு கேண்டி பருத்தி 38 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விலை போகிறது. நடப்பு பருத்தி பருவத்தில், சென்ற அக்டோபர் மாதம் உள்நாட்டு சந்தைக்கு 15 லட்சம் பருத்தி பொதிகள் விற்பனைக்கு வந்தது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில் 21 லட்சம் பொதிகள் என்றளவில் இருந்தது. மதிப்பீடுபருத்தி விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்போடு விவசாயிகள் காத்திருப்பதால், குறைந்த அளவில் தான், பருத்தி விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது.நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாட்டின் பருத்தி உற்பத்தி 3.55 கோடி பொதிகளாக (ஒரு பொதி-170கிலோ) உயர்ந்து புதிய சாதனை படைக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு, இதே காலத்தில், பருத்தி உற்பத்தி 3.25 கோடி டன் என்ற அளவில் இருந்தது. பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், அதன் விலை குறைந்துள்ளதாலும், மத்திய அரசுக்கு பருத்தியை அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆதரவு விலை கடந்த 2008-09ம் நிதியாண்டில், சர்வதேச நெருக்கடியால் இந்திய பருத்தி துறை பாதிப்பிற்கு உள்ளானது. உள்நாட்டு சந்தையில் பருத்தி வரத்து குறைந்தது. இதையடுத்து மத்திய அரச, பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 40 சதவீதம் உயர்த்தியது. மேலும், சாதனை அளவாக 90 லட்சம் பருத்தி பொதிகளை (ஒரு பொதி-170கிலோ) கொள்முதல் செய்தது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, பின்னர் மானிய விலையில், நூற்பாலைகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, பருத்திக்கான பற்றாக்குறை செயற்கையானது என்றும், மத்திய அரசு அதிக அளவில் பருத்தியை கொள்முதல் செய்ய வழிவகுத்துள்ளது எனவும் ஜவுளித் துறையினர் குற்றம் சாட்டினர்.தற்போதும், அதே நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு குவிண்டால் பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை 4,200 ரூபாயாக உயர்த்தப்பட்டால், நூற்பாலைகள் பருத்தி வாங்குவது குறையும். அப்போது, மத்திய அரசு, மீண்டும் சாதனை அளவாக பருத்தியை கொள்முதல் செய்து, பின்னர் மானிய விலையில் வழங்கும் நிலை உண்டாகும். இதனால், மத்திய அரசுக்கு மானியச் செலவினம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், மூலப்பொருள்கள், கூலி ஆகியவை 30 சதவீதம் உயர்ந்துள்ளதால், பருத்தி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, உலகளவில் பருத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், நடப்பாண்டு, பருத்தி உற்பத்தி சாதனை அளவை எட்டும் என்பதால், அதன் விலை மேலும் குறையும் என்று நூற்பாலைகள் எதிர்நோக்கியுள்ளன.இந்நிலையில், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மீண்டும் உயரும் பட்சத்தில், நூற்பாலைகளின் பருத்தி கொள்முதல் செலவு அதிகரிக்கும் என்று இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.ஜவுளித் துறைஏற்கெனவே, சர்வதேச நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஜவுளித் துறை, இதனால் மேலும் பாதிக்கப்படும். இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.), சந்தையில் இருந்து பருத்தி கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. பருத்தி வரத்து அதிகரித்து, தேவை குறையும் போது, பருத்தி விலை நியாயமான அளவை எட்டும்.இவ்வாண்டு, பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படவில்லை. சென்ற ஆண்டு 55 லட்சம் பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய முதலில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 10 லட்சம் பொதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.நடப்பு பருத்தி பருவத்தில், இதுவரை 15 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. டிசம்பரில் மேலும் 20 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்ய பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|