பதிவு செய்த நாள்
28 நவ2011
14:16
தூத்துக்குடி : தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட் டணத்தை உயர்த்தியது. பஸ்கட்டண உயர்வு பல மடங்கு அதிகரித்துள்ளதால் அதிருப்தியடைந்த பயணிகள் தற்பொழுது ரயில் பயணத்தை அதிகளவில் விரும்புகின்றனர். பஸ்கட்டணத்தை விட ரயில் கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. பஸ் பயணத்தை மறந்த பயணிகளுக்கு தற்போது பாசஞ்சர் ரயில்கள்தான் ஹீரோவாக தெரிகிறது.தமிழக முதல்வர் ஜெ., கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பஸ்கட்டண உயர்வை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் பொது துறை நிறுவனமான அரசு போக்கு வரத்துறை திவாலாகமல் காப்பாற்று வதற்கு பஸ்கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றும், தமிழ் நாட்டு நலனுக்காக மக்கள் இதை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ.,தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். என்னதான் மக்களை சமதானப்படுத்த முதல்வர் வேண்டுகோள் விடுத்தாலும் பஸ்கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் பஸ் பயணத்துக்கு பதிலாக மாற்றுவழியை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|