சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்குவதில் ஆர்வம் குறைகிறதுசிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்குவதில் ஆர்வம் குறைகிறது ... பங்குச் சந்தையின் சுணக்க நிலையால் 25 நிறுவனங்களின் பங்கு வெளியீடு நிறுத்தம் பங்குச் சந்தையின் சுணக்க நிலையால் 25 நிறுவனங்களின் பங்கு வெளியீடு ... ...
அன்னிய முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
00:05

புதுடில்லி,: அன்னிய நிதி நிறுவனங்கள், முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடுகளின் வரிசையில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என, ஆய்வு நிறுவனமான எர்னஸ்ட் அண்டு யங் தெரிவித்துள்ளது.இந்தியா, உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையை எதிர் கொண்டு சிறந்து விளங்குகிறது. மேலும், இதர நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக, வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உகந்த நாடாக, இந்தியா சிறந்து விளங்குகிறது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2004-05ம் நிதியாண்டு முதல், 2010-11ம் நிதியாண்டு வரையிலுமாக, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 31.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 88 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்துள்ளது.குறிப்பாக, இந்திய ராணுவத் துறை, அடுத்த 4-5 ஆண்டுகளில், 8,000 கோடி டாலர் மதிப்பிற்கு செலவிட உள்ளது. இதில், 65-70 சதவீத ராணுவ தளவாடங்கள், சர்வதேச நாடுகளில் இருந்து வாங்கப்படவுள்ளன.2020ம் ஆண்டிற்குள், இந்தியாவின் வாகன உற்பத்தி, மூன்று மடங்கு வளர்ச்சி காணும். இதே போன்று, மோட்டார் வாகன உதிரிபாகங்கள் துறையின் வளர்ச்சி தற்போதைய, 3,000 கோடி டாலரில் இருந்து, 11,000 கோடி டாலர் மதிப்பிற்கு அதிகரிக்கும். இத்துறைகள் அதிக அளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும்என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)